Dama som solgte melk // பவளக்கொடி

Foto: PixabayDette er en populær sang som handler om en dame som selger melk. Hun tenker mye på om hun kommer til å bli rik av å selge melken. Det endte opp med at hun mistet melke spannet og sølte all melka. Gjennom denne sangen vil man fortelle at man ikke skal drømme for mye før du gjør noe.

 

பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்

 

பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்

அங்கவட்டோர் நாளில் அடுத்த கதை கேளீர்

சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது

பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்

முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி

கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே

புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு

குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து

விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே

முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை

வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி

வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து

கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே

அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்

பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்

சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்

பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று

சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்

பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு

மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது

கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்

 கல்லடி வேலுப்பிள்ளை