Sang om tamilsk litteratur // வள்ளுவர் தந்த திருமறை

வள்ளுவர் தந்த திருமறையை- தமிழ்

நாவின் இனிய உயிர்நிலையை

உள்ளம் தெளிவுறப் போற்றுவமே- என்றும்

உத்தமராகி ஒழுகுவமே

பாவின் சுவைக்கடல் உண்டென்று- கம்பர்

பாரியை பொழிந்த தீம்பார்க்கடலை

நாவின் இனிக்குப் பருகுவமே- நூலின்

நன்நயம் முற்றும் தெளிகுவமே

தேனிலே ஊறிய செந்தமிழின்- சுவை

தேறும் சிலப்பதிகாரம் அதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும்-நிதம்

ஓதி உணர்ந்து இன்புறுவோமே.