Sang // கண்ணன் பாடல்

Ill. AdobeStockSang om Kannen sin rampestrek

 

 

கண்ணன் மாடு கன்று மேய்த்து
வேணு கானம் பாடுவான்
வெண்ணெய் திருடித் தின்பதற்கு
வீடு வீடாய் ஓடுவான்
வீட்டில் உள்ளோர் உறங்குகின்ற
வேளை நோக்கி ஓர் தினம்

வாட்டமின்றித் துணிவு கொண்டு
வந்து சேர்ந்தான் மாயவன்
ஊர்ந்து எட்டித் தொட்டனன்
சேர்ந்த பானை மூடி வீழ்த்திச்
சிதறி ஓசை கேட்டனன்
ஆச்சி அந்த ஓசை கேட்டு
யார் அதென்று கூவினாள்
கூச்சம் இன்றி கண்ணன் என்று
கூவி நின்றான் மாயவன்.