Sang om å holde seg frisk // உடலில் உறுதி

Foto: PixabayDenne sangen er skrevet av en kjent forfatter som har skrevet mange sanger til små barn. Sangen er enkel å synge og lett å lære.

Sangen handler om hvordan man skal holde seg frisk.

 

 

 

 உடலில் உறுதி உடையவரே

உலகில் இன்பம் உடையவராம்;
இடமும் பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்த முள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்,
நீண்ட ஆயுள் பெறுவாயே!

காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கு வருவோரின்
காலைத்தொட்டுத் கும்பிட்டுக்
காலன் ஓடி போவானே!

கூழை யேநீ குடித்தாலும்
குளித்த பிறகு குடியப்பா!
ஏழை யேநீ ஆனாலும்
இரவில் நன்றாய் உறங்கப்பா!

தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும்பபா
நூறு வயது தருமப்பா! 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை